Showing posts with label Kovil. Show all posts
Showing posts with label Kovil. Show all posts

Tuesday, January 12, 2010

தக்ஷினாமூர்த்தி சுவாமி


உளுந்தாண்டர் கோவில் - ஊர் மற்றும் கோவில் பெயர் அதுதான். கோவிலின் உட் பிரதட்சிணம் வரும்போது தக்ஷினாமூர்த்தி சுவாமி இருப்பார். பெரும்பாலும் இருட்டிலிருந்து பிரித்து அறியமுடியாத படியான குறைந்த வெளிச்சத்தில் இருப்பார் அவர். சிறுவர்களுக்கு தனியாக இரவில் வருவதென்பது சற்று பயமான விஷயம்தான். பெரும்பாலும் வௌவால்கள் நம்மை முந்திக்கொண்டு ஒரு ஓட்டம் ஓடும். பெரிய தாத்தா அவர் முன் உட்கார்ந்து அரை மணி நேரம் தியானம் செய்வாராம். பெரும்பாலும் என்னுடைய இரண்டாவது சகோதரி சத்யம் அக்கா உடன் இருப்பாளாம். இருட்டுக்கு பயந்து கொண்டு அவருடைய விரலை பிடித்தபடியே கோவில் சுற்றி வந்து அவர் அருகிலேயே உட்கார்ந்து கொள்வாளாம். தற்போது அத்வைத சித்தாந்தத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அவளுடைய ஞான வேட்கை தாத்தாவின் வழிகாட்டலில் அந்த ஞான குருவின் அருள் என்பதை அவள் பூரணமாக நம்புகிறாள். ஞான விதைகள் போட நேரம் காலம் வயது எதுவும் தேவையில்லை. தருணங்கள் போதும்.