Tuesday, November 13, 2007

Krishnaswamy Iyer

ஒரு முறை சிவராத்திரிக்கு பணத்தட்டுப்பாடு காரணமாக பெரிய தாத்தா செம்மனங்கூர் ரெட்டியிடம் கடன் கேட்கும் நிலை வந்து கேட்டதற்கு அவர் பண உதவி செய்யாமல் ஒரு உபதேசம் செய்தாராம்."ஸார் உங்களுக்குப் பண முழக்கம் பலவீனமான இந்நிலையில் ஏன் வேண் சிரமப் படுகிறீர். உங்களின் முதல் கால பூஜையை அதிகார பூர்வமாக எங்களுக்கு தாரா தத்தம் செய்து தாரும்" என்றாராம். தாத்தாவிற்கு கோபம் வந்தது. அதற்கு அவர் "ரொம்ப நன்றி. இன்னும் எனக்கு உடலில் வலுவும், மனதில் நம்பிக்கையும் இருக்கிறது. என் சிவனென்னை கைவிட மாட்டான். அவன் அருள் எப்படியோ அப்படி நடக்கும். குளம் நிறைய நீர், வீட்டில் பசும்பால், வயலில் இளநீர் இவற்றை வைத்து அபிஷேகம் செய்கிறேன். வேண்டாம் என்று சொல்லிடுவானோ என் சிவன் என்று மன உறுதியோடு வேறே ஏற்பாடு செய்து சிவராத்திரியை செவ்வனே செய்தவர்.அவரின் அசைக்க முடியாத பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டுதான் இந்நிகழ்ச்சி. இது போன்ற மற்றொரு நிகழ்ச்சி அடுத்த தொடரில்.
அக்கா.