தற்போதுள்ள 8 அக்ரகாரம் உளுந்தாண்டார்கோவில் வீடு ஒரு லட்சிய வைராக்யத்துடன் கட்டப்பட்டது, உறவினர் வீட்டில் தங்கியிருந்து பேச்சுத் தகறhரு பெரும் சண்டையில் முடிய தனி வீடு போகவேண்டியதானது, போனால் சொந்த வீடுதான் என்று தீர்மானமானது, இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் தங்கள் அணிமணிகளை விற்க முன்வந்து எல்லாம் லட்சியவெறியில் நிறைவேறியது, செங்கல் செய்வதுமுதல் சுண்ணாம்பு பொடிப்பது வரை எல்லாம் துரித கதியில் இயங்கின, உத்திரத்திற்கு மரம் கூட ஆத்தூர் அருகிலிருந்து வந்தது, அந்த வீடு கல் மண் மரம் அல்ல, கௌரவம் கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றhல் ஆனது, அதன் மதிப்பு அரிதான மகத்துவமுடயது,
Saturday, January 26, 2008
கறார்
உளுந்தாண்டார்கோவில் ஊர்ப்பெரியவர்கள் வீட்டிலிருந்து நாலைந்துபேர் இரவு டியூஷன் படிப்பதற்காக வருவார்களாம், அப்படி வரும்போது அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து லாந்தர் விளக்கு (அதாவது மண்ணெண்ணெய் விளக்கு) எடுத்ததுவர வேண்டும், அதே சமயம் அந்த விளக்கை தன் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்,அவ்வளவு கறார் சின்னதாத்தா,
நேர்வழி
பெரியதாத்தா என்று நாங்கள் அழைக்கம் கிருஷ்ணசாமி தாத்தாவும் சின்ன தாத்தா என்றழைக்கும் சுப்பராமய்யர் தாத்தாவும் நிறைய இடர்கள் தாண்டி வந்தது எல்லோரும் எதிர்படும் இன்னல்கள்தான், ஆனால் கௌரவத்திற்கு பங்கம் இல்லாமலும் நேர்வழி பிசகாமலும் நடத்திய வாழ்க்கை முறை மிக போற்றுதலுக்குரியது,
Subscribe to:
Posts (Atom)