Saturday, July 14, 2012

அந்த காலத்தில் கிராமங்களில் நெல் மூட்டையை அருகில் உள்ள நகரத்து அரவை மில்லுக்கு கொண்டு சென்று - அரிசி நொய்  தவிடு என்று கொண்டு வருவது வழக்கம். அப்படி கொண்டு போக. என் தாத்தா மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிவிட்டு . மிஷினுக்கு போ என்று வண்டி மாடுகளிடம் சொல்வாராம் . அவை இரண்டு மைல் தூரத்தில்   உள்ள மிஷினுக்கு தானாகவே - ஓட்டும் ஆள் இல்லாமல் - போகுமாம். பின்னால் சைக்கிளில் தாத்தா செல்வாராம். அப்படிப்பட்ட பழகிய மாடுகள் இருந்தன அப்போது .