Sunday, December 16, 2007

Krishnaswamy- Subbaraman & Agri

கிருஷ்ணசாமி சுப்பராமன் சகோதரர்கள் தங்களுடைய உடல் மன உழைப்புகளை பெரும்பாலும் விவசாய நிலத்திற்கு செலவிட்டனர், பெரும்பாலும் வீட்டு நகைகள் பொருட்கள் அடகுக் கடையில் வாசம் செய்யும், நிறைய கடன் உண்டு, அவற்றை மண்ணில் போட்டு தானியங்களை விளைத்தனர், களர் உவர் தன்மைய உடைய நிலத்தை நிறையபாடுபட்டு விளைக்க தக்கனவாய் செய்தனர்,அவர்களுக்கு மின்சார மோட்டார் போட்டு தண்ணீர் இறைத்து விவசாயம் செய்வதே கனவு, இடையில் தம்பியை இழந்த பெரியவர் பாடுபட்டு லோன் ஏற்பாடுகள் எல்லாம் செய்து மோட்டார் கைகூடி வரும்போது அவர் பாரிசவாயு தாக்கி இயக்கமற்றுப்போனார், பிறகு அவ்விருவருடைய பிள்ளைகள் அவற்றை நிறைவேற்றினர்,