Saturday, February 7, 2009

தக்ஷிணாமூர்த்தி

பெரிய தாத்தா டகு டகு டிகு டிகு என்று கந்த சஷ்டிகவசம் சொல்லிக்கொண்டே சந்தனம் அரைப்பது தினசரி காட்சி என்று அம்மா சொல்லுவார்,
அதேபோல் தாத்தா தட்சிணாமுர்த்தியை சுலோகம் சொல்லி தப்பாது வணங்குவராராம்,ஞானவழிக்கு தட்சிணாமுர்த்தி என்று சொல்வார்கள், அதுவே அவரை நன்கு செதுக்கியிருக்கிறது எனலாம், அவர் மிக சராசரியான மனிதர்போல தோன்றினாலும் பேசினாலும் அவருக்குள் ஒரு மேதமை பொருந்திய அனுக்கம் இருந்திருக்கிறது, கோவிலின் கர்பகிருகத்துள் அசையாது எரியும் தீபமும் அதைச்சுற்றி அந்த சிறியஇடத்தில் நிலவும் கதகதப்பையும் போல, பெரும்பான்மையான அவருடைய தட்சிணாமுர்த்தி வழிபாட்டின்போது அவரது விரலைப்பிடித்துக்கொண்டு கூடவே ஒரு சிறுமி நின்றிருக்கிறhள், அவள் இப்போதும் அதன் வியாபகத்தில் இருக்கிறhள் என்பது என் எண்ணம், அவளுக்கு அந்த விரல்தான் இப்போது இல்லை, ஆனால் அந்த பிடி அப்படியே இருக்கிறது,,

விளக்கு


2009 சிவராத்திரி நெருங்குகிறது, இத்தருணத்தில் எல்லா முன்னோர்களையும் மானசீகமாக வேண்டிக்கொள்ள வேண்டும், மிக சாதாராண சராசரியான வாழ்க்கைமுறையில் மேலோங்கிய ஆன்மீக உந்துதலுடனும் அர்ப்பணிப்போடும் அவர்கள் செய்ததன் பயனும் பலனுமே இன்றைய பெனுபர்த்தி,
ஒருமுறை குருக்கள் கோவிலில் விளக்குக்கு எண்ணெய் இல்லை என்று சாவதானமாக சொன்னாராம், அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு பெரிய தாத்தா தினமும் சென்று ஒரு விளக்கு வைத்துவிட்டு சிவதரிசனம் செய்துவிட்டு வருவாராம், ஏன் வைக்கிறhர் என்று யாருக்கும் தெரியாது, அவரும் சொன்னதில்லையாம் வெகுநாள்வரை,
இருட்டு என்று சொல்லாதே, ஒரு விளக்கை ஏற்றி வை என்று ஒரு சீனப்பழமொழி உண்டு, சில தத்துவங்கள் தத்துவம் என்று தெரியாமலேயே அதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் சிலர் உண்டு, தாத்தாவும் அதில் ஒருவர்,