Saturday, February 7, 2009

விளக்கு


2009 சிவராத்திரி நெருங்குகிறது, இத்தருணத்தில் எல்லா முன்னோர்களையும் மானசீகமாக வேண்டிக்கொள்ள வேண்டும், மிக சாதாராண சராசரியான வாழ்க்கைமுறையில் மேலோங்கிய ஆன்மீக உந்துதலுடனும் அர்ப்பணிப்போடும் அவர்கள் செய்ததன் பயனும் பலனுமே இன்றைய பெனுபர்த்தி,
ஒருமுறை குருக்கள் கோவிலில் விளக்குக்கு எண்ணெய் இல்லை என்று சாவதானமாக சொன்னாராம், அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு பெரிய தாத்தா தினமும் சென்று ஒரு விளக்கு வைத்துவிட்டு சிவதரிசனம் செய்துவிட்டு வருவாராம், ஏன் வைக்கிறhர் என்று யாருக்கும் தெரியாது, அவரும் சொன்னதில்லையாம் வெகுநாள்வரை,
இருட்டு என்று சொல்லாதே, ஒரு விளக்கை ஏற்றி வை என்று ஒரு சீனப்பழமொழி உண்டு, சில தத்துவங்கள் தத்துவம் என்று தெரியாமலேயே அதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் சிலர் உண்டு, தாத்தாவும் அதில் ஒருவர்,

No comments: