Saturday, December 5, 2009
டைம் பீஸ்
சின்ன தாத்தா பள்ளிக்கூட ஆசிரியர்/ அவர் தினமும் கையில் அலாரம் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு தெருவை ஒரு சுற்று சுற்றி வந்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு போவாராம். எப்போதும் அவருடன் அந்த டைம் பீஸ் இருக்குமாம்.
வாழைப்பூ
Saturday, October 3, 2009
தமாஷ்
Saturday, April 18, 2009
அனுசரணை
சின்ன தாத்தா ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர். அவருடைய கோபமும் அடியும் பிரசித்தம். இப்போதுகூட ௬00 வயது தாண்டிய பலர் அவ்வூரில் அவருடைய ஆரம்ப பள்ளி மாணவனாக இருந்திருப்பார்கள். கார்போறல் பனிஷ்மென்ட் எல்லாம் சகஜம். அதே சமயம் அனுசரணையும் உண்டு. மாணவனை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோரை கண்டிப்பார். காலையில் கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு ஊர் தெருவை ஒருமுறை சுற்றி வருவாராம். அந்த நிமிடம் வரை பள்ளிக்கு போகாது இருக்க நினைத்த பையன்கள் எல்லோரும் பள்ளிக்கு ஒடுவார்களாம். சிறுவனுக்கு சட்டை இல்லை அதனால் அனுப்பவில்லை என்று சொன்னால் தன்னுடைய சட்டை ஒன்றை கொடுத்து போட்டுக்கொண்டு ஓடுடா என்பாராம். அவன் உடல் முழுவதையும் சாட்டையால் மறைத்தபடி ஓடுவானாம். காலை சாப்பாடு இல்லை என்றால் அவனை தன் வீட்டுக்கு அனுப்பி - இவனுக்கு சாப்பாடு போட்டு அனுப்பவும் - என்று ஒரு சிட் எழுதி அனுப்பி அவனை சாப்பிடச்சொல்லி பின் பள்ளிக்கு அழைப்பாராம்.
Friday, April 17, 2009
அன்பளிப்பு
மீசைக்கார தாத்தா உறவினருடைய மகள் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் ஜானவாசம் (அல்லது கல்யாணத்தில் ஏதோ ஒரு முக்கிய அம்சமான விசேஷம்) புடவை வாங்க முடியவில்லை. அதனால் இருக்கிற நல்ல புடவையை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று இருப்பதாக சொன்னாராம். உடனே தாத்தா புது புடவை இல்லாமல் கல்யாண விசேஷமா என்று தான் எங்கேயோ பேசி தான் கடனாக புடவை வாங்கி அதை தந்து நடத்த சொன்னாராம். பிறகு தான் அண்ணனிடம் இப்படி கடன் வாங்கி தந்துவிட்டேன் என்று சொன்னாராம். பண வரத்து அவர்களிடம் இல்லாதபோதும் உதவி செய்தவர்கள் அவர்கள்.
இப்போதும் யாருடைய கல்யானதிர்காவது சென்று அன்பளிப்பு அளிக்கும்போது எனக்கு தாத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். நான் அளிக்கும் அன்பளிப்பு எதுவாயினும் அது எனக்கு மிக சொற்பமானதாக எனக்கு தோன்றுகிறது.
சப்தமின்றி உதவி
Saturday, April 4, 2009
மீசக்கார தாத்தா
நான் என் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது ஒருமுறை கிழக்கு தெருவில் வீடு தீப்பற்றிக்கொண்ட போது நான் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணீரை விசிறி உதவிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் (அவர் பெயர் நினைவில் இல்லை. கூத்து நடக்கும்போது வெங்கடாஜலபதி வேஷம் போடுவார் அவர்) "உங்க மீசக்கார தாத்தா இப்பிடிதான் வருவாரு அவசரம்னா " என்றார். அவர் மூலம்தான் தாத்தாவின் சில விஷயம் எனக்கு தெரியும்.
பள்ளிக்கூடம்
மார்கண்டேயன் தாத்தா வெள்ளூர் என்ற ஊரில் இருந்தார். நல்லன்குப்பம் அருகே என்று நினைக்கிறேன். அது நெய்வேலி அருகே இருந்தது. சுரங்க வேலை ஆரம்பித்து நிலக்கரி சுரங்கங்கள் விரிந்தபோது அந்த கிராமம் இல்லாமல் போய்விட்டது. அங்கிருந்து உளுந்தாண்டர் கோவிலுக்கு முதலில் சின்ன தாத்தாதான் வந்தாராம். அப்போது ஒரு வீட்டில்தான் பள்ளிக்கூடம். பிறகு சுப்ரமண்ணிய நயினார் நிலத்தை தர அரசு அதிகாரிகளிடம் பேசி பள்ளிக்கூடம் கட்ட முனைந்தார் தாத்தா. அது மிக நீளமாக இருக்கும். குதிரை லாயம் போல. நானும் அதில் படித்திருக்கிறேன். அது இடிந்தபோது கொஞ்சநாட்கள் கோவிலில் பள்ளிக்கூடம் நடந்தது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்தேன் கோவில் பள்ளியில். தாத்தா தொடங்கி வைத்த பள்ளிதான் இப்போது அங்கே இருப்பது. வடிவம்தான் மாறியிருக்கிறது.
அப்பாவின் சைக்கிள்
அச்சி பாட்டிக்கு மூன்று சகோதரர்கள். ஒருவர் புரொபசர். அவர் இளமையிலேயே இறந்துவிட்டார். அவருடைய சைக்கிளை பாவா - அதாவது பெரிய தாத்தாவுக்கு உபயோகிக்க கொடுத்தனர். அதை சின்ன தாத்தா அனுசெட்டிபலயத்தில் இருந்து தொட்டகுப்பம் செல்ல உபயோகித்து வந்தார். பிறகு உளுந்தாண்டார்கோயில் வந்தபோது பெரியதாத்தா ஆதனூர் சென்று வர உபயோகித்தார். பிறகு செம்மனன்கூர் புதூர் போக வர உபயோகித்தார். சின்ன தாத்தா வேட்டவலம் சென்றுவர உபயோகித்தார். அவர்களுக்கு பிறகு அப்பா உபயோகித்தார். பிறகு நானும் அதை உபயோகித்து வந்தேன் அப்பா இருக்கும்வரை. ஆனால் நான் நிறைய மாற்றிவிட்டேன் அந்த சைக்கிளை. சைக்கிளை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து பழுது பார்த்து பின்பு பூட்டிவிடுவேன். அப்பாவிடம் கற்றது. சிறு சிறு பகுதிகளாக மாற்றி மாற்றியபோதும் எப்போதும் அதில் ஒரு பழைய பகுதி இருந்துகொண்டே இருக்கும். கெரோசின் விளக்கு ஒன்று உண்டு. அதை ஹண்டில்பாரின் முன் மாட்டிவிடுவர் இரவில். பிறகு வெகு நாள் கழித்து சேலம் விஸ்வம் பாவா கொடுத்த டைனமோவை நான் இம்சித்து மாட்டிவிட்டேன். ஆனால் அப்பா சைக்கிள் டயருக்கு ஆயுள் குறைவு என்று உபயோகிக்க மாட்டார். சைக்கிள் பெல்லைவிட செயினின் க்ரீச் க்ரீச் சத்தம் வைத்தே அப்பா வருகிறார் என்று சொல்லிவிடுவோம். சைக்கிள் அப்பாவின் குழந்தை. அப்பா உடல் நலம் குன்றியபோது நீண்ட நாட்களாக அந்த சைக்கிள் அப்படியே இருந்தது. அப்பா இனி சைக்கிள் ஓட்ட மாட்டார் என்ற நிலை தெரிந்தபோது தெரிந்த ஒருவருக்கு அதை விற்றாயிற்று. இப்போது இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிடைத்தால் என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடுவேன் அக்குழந்தையை.
அச்சி பாட்டி
Friday, April 3, 2009
அங்குசெட்டிபாளையம்
Saturday, February 7, 2009
தக்ஷிணாமூர்த்தி
அதேபோல் தாத்தா தட்சிணாமுர்த்தியை சுலோகம் சொல்லி தப்பாது வணங்குவராராம்,ஞானவழிக்கு தட்சிணாமுர்த்தி என்று சொல்வார்கள், அதுவே அவரை நன்கு செதுக்கியிருக்கிறது எனலாம், அவர் மிக சராசரியான மனிதர்போல தோன்றினாலும் பேசினாலும் அவருக்குள் ஒரு மேதமை பொருந்திய அனுக்கம் இருந்திருக்கிறது, கோவிலின் கர்பகிருகத்துள் அசையாது எரியும் தீபமும் அதைச்சுற்றி அந்த சிறியஇடத்தில் நிலவும் கதகதப்பையும் போல, பெரும்பான்மையான அவருடைய தட்சிணாமுர்த்தி வழிபாட்டின்போது அவரது விரலைப்பிடித்துக்கொண்டு கூடவே ஒரு சிறுமி நின்றிருக்கிறhள், அவள் இப்போதும் அதன் வியாபகத்தில் இருக்கிறhள் என்பது என் எண்ணம், அவளுக்கு அந்த விரல்தான் இப்போது இல்லை, ஆனால் அந்த பிடி அப்படியே இருக்கிறது,,
விளக்கு
ஒருமுறை குருக்கள் கோவிலில் விளக்குக்கு எண்ணெய் இல்லை என்று சாவதானமாக சொன்னாராம், அதிலிருந்து நீண்ட நாட்களுக்கு பெரிய தாத்தா தினமும் சென்று ஒரு விளக்கு வைத்துவிட்டு சிவதரிசனம் செய்துவிட்டு வருவாராம், ஏன் வைக்கிறhர் என்று யாருக்கும் தெரியாது, அவரும் சொன்னதில்லையாம் வெகுநாள்வரை,
இருட்டு என்று சொல்லாதே, ஒரு விளக்கை ஏற்றி வை என்று ஒரு சீனப்பழமொழி உண்டு, சில தத்துவங்கள் தத்துவம் என்று தெரியாமலேயே அதை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் சிலர் உண்டு, தாத்தாவும் அதில் ஒருவர்,