Saturday, April 4, 2009

பள்ளிக்கூடம்


மார்கண்டேயன் தாத்தா வெள்ளூர் என்ற ஊரில் இருந்தார். நல்லன்குப்பம் அருகே என்று நினைக்கிறேன். அது நெய்வேலி அருகே இருந்தது. சுரங்க வேலை ஆரம்பித்து நிலக்கரி சுரங்கங்கள் விரிந்தபோது அந்த கிராமம் இல்லாமல் போய்விட்டது. அங்கிருந்து உளுந்தாண்டர் கோவிலுக்கு முதலில் சின்ன தாத்தாதான் வந்தாராம். அப்போது ஒரு வீட்டில்தான் பள்ளிக்கூடம். பிறகு சுப்ரமண்ணிய நயினார் நிலத்தை தர அரசு அதிகாரிகளிடம் பேசி பள்ளிக்கூடம் கட்ட முனைந்தார் தாத்தா. அது மிக நீளமாக இருக்கும். குதிரை லாயம் போல. நானும் அதில் படித்திருக்கிறேன். அது இடிந்தபோது கொஞ்சநாட்கள் கோவிலில் பள்ளிக்கூடம் நடந்தது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்தேன் கோவில் பள்ளியில். தாத்தா தொடங்கி வைத்த பள்ளிதான் இப்போது அங்கே இருப்பது. வடிவம்தான் மாறியிருக்கிறது.

No comments: