Friday, April 3, 2009

அங்குசெட்டிபாளையம்


என் தாத்தாக்கள் பெரிய தாத்தா சின்ன தாத்தா இருவரும் தங்களுடைய நாட்களில் - ௧௯௨0-௨௫ அங்குசெட்டிபாளையம் என்ற ஊரில் ஒரு சத்திரத்தில் தங்கி அங்கிருந்து கொஞ்சம் காலம் ஆசிரியர்களாக வேலை செய்தனர். அய்யர் வீட்டுப் பிள்ளைகள் என்பதால் சத்திரத்திலேயே தங்கியிருக்க ஊர் பெரியவர்கள் அனுமதி தந்திருந்தனர். சின்ன தாத்தா அங்கிருந்து தோட்டப்பட்டு என்ற ஊருக்கு சென்று பணிபுரிந்தார். பலரும் வந்து போகும் சத்திரத்தில்தான் அவர்கள் சொற்ப காலம் தங்கியிருந்தனர் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக கடலூர் போகும்போது அங்கே இறங்கி அந்த ஊரில் விசாரித்தபோது அந்த சத்திரம் இப்போது இல்லை என தெரிந்தது. முதியவர்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஒரு வகையில் அவர்கள் இருந்தது சிறிய சத்திரம் என்றால் நாமெல்லாம் இருப்பது உலகம் என்ற பெரிய சத்திரத்தில். அங்கிருந்துதான் ஆசிரியர்களாக பணிபுரிந்தார்கள். இப்போது அந்த ஊரின் பெயர் பழகிய போட்டோ எடுத்த போது அதன் கம்பங்களில் கற்போம் கற்பிப்போம் என்று வாசகம் இருந்தது. அது யதேச்சையாக இருந்தாலும் எனக்கு என் தாத்தா சொல்வதுபோல் இருந்தது!

No comments: