Friday, April 17, 2009

அன்பளிப்பு


மீசைக்கார தாத்தா உறவினருடைய மகள் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் ஜானவாசம் (அல்லது கல்யாணத்தில் ஏதோ ஒரு முக்கிய அம்சமான விசேஷம்) புடவை வாங்க முடியவில்லை. அதனால் இருக்கிற நல்ல புடவையை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று இருப்பதாக சொன்னாராம். உடனே தாத்தா புது புடவை இல்லாமல் கல்யாண விசேஷமா என்று தான் எங்கேயோ பேசி தான் கடனாக புடவை வாங்கி அதை தந்து நடத்த சொன்னாராம். பிறகு தான் அண்ணனிடம் இப்படி கடன் வாங்கி தந்துவிட்டேன் என்று சொன்னாராம். பண வரத்து அவர்களிடம் இல்லாதபோதும் உதவி செய்தவர்கள் அவர்கள்.

இப்போதும் யாருடைய கல்யானதிர்காவது சென்று அன்பளிப்பு அளிக்கும்போது எனக்கு தாத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். நான் அளிக்கும் அன்பளிப்பு எதுவாயினும் அது எனக்கு மிக சொற்பமானதாக எனக்கு தோன்றுகிறது.

No comments: