Friday, April 17, 2009

சப்தமின்றி உதவி


ஒருமுறை அப்பா கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது எதிரே உறவினர் பையன் ஒருவனைப் பார்த்தார் . என்னடா பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டார். பள்ளி இறுதி வகுப்பாயிற்றே . பரீட்சைக்கு பணம் கட்ட முடியவில்லை. அடுத்த வருடம் எழுதலாம் என்று அப்பா சொல்லிவிட்டார் என்றாரம். படிக்கற பய்யன் ஒரு வருஷம் வீணா போகுமேடா எனச்சொல்லி நான் பணம் தருகிறேன் போய் பீஸ் கட்டிவிட்டு பள்ளிக்கூடம் போ என்றாராம். அப்பா திட்டுவார் என்று பய்யன் சொல்ல நான் அவரிடம் சொல்லிக்கொள்கிறேன் நான் இந்த பணத்தை பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அந்த பய்யனுக்கு பணம் கட்டினாராம் அப்பா. அதை யாரிடமும் அவர் சொன்னதில்லை

No comments: