Saturday, April 4, 2009

மீசக்கார தாத்தா

சின்ன தாத்தா ஒரு ஹீரோ. அந்த காலத்தில் அக்ரகாரம் வழியே சிலர் செருப்பு அணிந்து செல்ல மாட்டார்கள். அந்த காலத்து ஜாதீய பிடிப்புகள் இருந்தது. ஆனால் மனித நேயம் உள்ளவராம் தாத்தா. வீடு தீப்பிடித்து எரிகிறது என்றால் சைக்கிளை கொடுத்து தீயணைப்புக்கு அனுப்பிவிட்டு தான் ஓடி நின்று எல்லோருடனும் சேர்ந்து தண்ணீரை விசிறி தீயை அணைத்துக் கொண்டிருப்பாராம். யாருக்காவது கஷ்டம் என்றால் உடனடியாக உதவுவாராம். அவரிடம் கண்டிப்பும் கருணையும் இருந்தது. நான் அவரை பார்த்ததில்லை.

நான் என் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது ஒருமுறை கிழக்கு தெருவில் வீடு தீப்பற்றிக்கொண்ட போது நான் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தண்ணீரை விசிறி உதவிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் (அவர் பெயர் நினைவில் இல்லை. கூத்து நடக்கும்போது வெங்கடாஜலபதி வேஷம் போடுவார் அவர்) "உங்க மீசக்கார தாத்தா இப்பிடிதான் வருவாரு அவசரம்னா " என்றார். அவர் மூலம்தான் தாத்தாவின் சில விஷயம் எனக்கு தெரியும்.

No comments: