Saturday, April 18, 2009

அனுசரணை

சின்ன தாத்தா ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர். அவருடைய கோபமும் அடியும் பிரசித்தம். இப்போதுகூட ௬00 வயது தாண்டிய பலர் அவ்வூரில் அவருடைய ஆரம்ப பள்ளி மாணவனாக இருந்திருப்பார்கள். கார்போறல் பனிஷ்மென்ட் எல்லாம் சகஜம். அதே சமயம் அனுசரணையும் உண்டு. மாணவனை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோரை கண்டிப்பார். காலையில் கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு ஊர் தெருவை ஒருமுறை சுற்றி வருவாராம். அந்த நிமிடம் வரை பள்ளிக்கு போகாது இருக்க நினைத்த பையன்கள் எல்லோரும் பள்ளிக்கு ஒடுவார்களாம். சிறுவனுக்கு சட்டை இல்லை அதனால் அனுப்பவில்லை என்று சொன்னால் தன்னுடைய சட்டை ஒன்றை கொடுத்து போட்டுக்கொண்டு ஓடுடா என்பாராம். அவன் உடல் முழுவதையும் சாட்டையால் மறைத்தபடி ஓடுவானாம். காலை சாப்பாடு இல்லை என்றால் அவனை தன் வீட்டுக்கு அனுப்பி - இவனுக்கு சாப்பாடு போட்டு அனுப்பவும் - என்று ஒரு சிட் எழுதி அனுப்பி அவனை சாப்பிடச்சொல்லி பின் பள்ளிக்கு அழைப்பாராம்.

No comments: