சுமார் அறுபது ஆண்டுக்கு முன் இருக்கலாம். மீசைக்கார தாத்தா என்றழைக்கப்படும் சின்ன தாத்தா வீட்டுக்குள் நுழையும்போது அத்தை (அவர் தங்கை ) பதட்டத்துடன் கண்ணீருடன் இருந்தவர் இவர் வருவதைக் கண்டவுடன் சட்டென்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாராம் . (அவர் பேரை சொன்னாலே வீடே நிசப்தம் ஆகிவிடும். அப்படி ஒரு பயம் அனைவருக்கும்.) இதை கவனித்த தாத்தா என்னவென்று விசாரித்தாராம். விஷயம் ஒன்றுமில்லை. அத்தையின் மூத்த மகன் - சிறுவன் ஏதோ அடம் பிடித்து கேட்டதை தரவில்லை என்பதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுவேன் என்று மாடி மேல் போய் நின்று கொண்டிருந்தானாம். தாத்தா கீழே இருந்து பார்த்தார். பையன் மேலே நிற்கிறான். கீழே இடப்புறம் பெரிய வைக்கோல் போர் இருக்கிறது. உடனே தாத்தா மளமளவென்று அருகிலிருந்த முள் செடியின் கிளைகளை வெட்டி வைக்கோலின் மேல் போட்டுவிட்டு "இப்போது குதி. குதிக்காவிட்டால் நான் வந்து தள்ளி விடுவேன்" என்றாராம். பையன் பத்திரமாக கீழே இறங்கி வந்தானாம்.
Friday, June 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment