Saturday, April 28, 2012

பெயர்காரணிகள்

பொதுவாக குடும்பத்தில் பெயர் வைக்கும் வழக்கம் என்பது சில நியதிகளை கொண்டிருக்கும். பொதுவாக குழந்தைக்கு மூன்று பெயர்கள் வைப்பது உண்டு. அதில் செல்லப்பெயர் - காரணப் பெயர் போக முதலாவதாக முந்தைய தலை முறையினரின் பெயர் வைப்பது உண்டு. எங்கள் குல தெய்வம் அந்தியூர் அருகே உள்ள குருநாத சுவாமி என்ற பெயருடைய முருகன். ஆதலால் முதல் குழந்தைக்கு குரு என்கிற வார்த்தை சேர்த்து பெயர் வைப்பது வழக்கமாய் இருந்திருக்கிறது. பெண்களுக்கு கூட குரு என்கிற வார்த்தை சேர்த்தே வைப்பதுண்டு. ஏனோ என்னுடைய கிளை தாத்தாக்கள் அதை தொடரவில்லை. மற்ற கிளைகள் சில இன்னும் தொடர்கின்றன. ஆகவே மறந்து போய்விட்ட தொடர்புகள் கூட இந்த மூலப்பெயர் கொண்டு மீண்டும் தொடர்பு கொள்ள ஏதுவாகலாம். எனக்கு தெரிந்து இப்படி பெயர் வைத்து இருப்பவர்கள் இருவர்.


இவர்கள் பெருமைக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள். முகஸ்துதி அல்ல.  

வேறு யாரும் கூட இப்படி வைத்திருக்கலாம். ஆனால் என்னுடைய கவனத்திற்கு வரவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கலாம்.

 

No comments: