Saturday, April 28, 2012

வறுமையில் செம்மை - மார்கண்டேயன்

மார்கண்டேயன் - அப்பாவின் தாத்தா. மிகச்சாதாரண குடும்ப நபர். வசதி எல்லாம் கிடையாது. அவர் உளுந்தாண்டார் கோவில் ஊரில் இருந்தார். ஊரின் செல்வந்தரும் பெரிய தனக்காரரும் ஆனா அப்பாசாமி நயினார் என்பவர் அவருடைய ஆத்ம நண்பர். ஒரு முறை வீடு தீப்பற்றி எரிந்து போனபோது (இது பற்றி இந்த தளத்திலேயே வேறொரு இடத்தில் சொல்லப்பட்டு உள்ளது ) உடமைகள் வீடு எல்லாம் எரிந்து போயின. கல் உரல் கூட வெடித்துச் சிதறி இருக்கிறது. அப்போது என்ன செய்வது என்று யோசித்தபோது அப்பாசாமி நயினார் தான் வேறு ஏற்பாடு செய்வதாக சொன்ன பொது "அதெல்லாம் வேண்டாம்" என்று அன்புடன் மறுத்து நெய்வேலிக்கு அருகே உள்ள வெள்ளூர் என்ற கிராமத்திருக்கு போய்விட்டாராம். அந்த வெள்ளூர் இப்போது தேடினாலும் கிடைக்காது. ஏன் என்றால் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தில் அது தோண்டப்பட்டு மறைந்து விட்டது. 

நட்புக்கு இடையில் பொரளாதார விஷயம் அதற்கு பங்கம் விளைவிக்க கூடாது மற்றும் சுய கௌரவம் காரணமாக அவர் அப்படி செய்திருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

வறுமையில் செம்மை என்கிறார்களே ! அது இதுவோ ? 

No comments: