Monday, November 4, 2013

நாத தனுமனிசம்

அச்சிப் பாட்டி என்று நான் கேள்விபட்டிருந்த என் அப்பாவின் அம்மா நல்ல சங்கீத ரசனை உள்ளவர். தாத்தாவுக்கு?  ஊஹூம். திருவிளையாடல் சினிமாவில் ஹேமாநாதபாகவதர் பாலையா சொல்வது போல யாரும் வாயைத்திறந்து பாடக்கூடாது. இந்த நெருக்கடிகடிகளுக்கிடையில் சமையறையிலும் பின்கட்டிலும் அம்மாவிடம் கற்ற மகள்களான என் அத்தைகள் அனைவருமே பாடுவதில் சமர்த்தர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோதும் பிறகும் கூட எங்கள் தெருவிலுள்ள வீடுகளுக்கு எப்போதாவது ஒரு பெரியவர் வருவார். நரைதாடி மீசை லேசான வழுக்கை. இடுப்பில் நாலுமுழவேட்டி. மடித்துக்கட்டிய துண்டு. நெற்றியில் விபூதிக்கிற்றுகள். கையில் கஞ்சிரா. நல்ல கணீர் குரல். கர்நாடக சங்கீதப் பாடல்களை பாடுவார். அரிசியோ பணமோ பெற்றுக்கொண்டு போவார். மறுபடி எப்போது வருவார் என்று தெரியாது. அடுத்தவருடம் திடீரென தோன்றுவார். எங்கள் வீட்டில் அவரை பாடச்சொல்லி கேட்பார்கள். சித்தரஞ்சனியில் அவருடைய நாத தனுமனிசம் தவறாமல் உண்டு. அது பாட்டி மிகவிரும்பி கேட்கும் பாடலாம். பக்கத்துவீட்டில் அவரை பாடச்சொல்லிக் கேட்டு சத்தமில்லாமல் நன்றியோடு கொஞ்சம் அரிசி கொடுத்தனுப்புவாராம்.
இதை கேட்கையில் அந்த பெரியரின் நினைவு வருகிறது பாட்டியின் நினைவோடு.
https://www.youtube.com/watch?v=D9DqU_yFI8w

No comments: