Wednesday, August 14, 2013

பாலக்கொல்லை தபால் ஆபீஸ்

முன்பெல்லாம் கிராமங்களுக்கு தபால் ஆபீஸ் என்பது மூச்சு. கடிதங்கள் தந்தி போன்றவை தொடர்பு சாதனங்கள். சிறு கிராமங்களில் தபால் ஆபீஸ் கிடையாது . ஆகவே நம்பிக்கைக்கு உரிய யாராவது ஒருவருக்கு லைசென்ஸ் ஸ்டாம்ப் தந்து கார்டு கவர்கள்  விற்பனை செய்வார்கள். அதில் லாபம் எதுவும் கிடையாது. ஒரு கௌரவ நிமித்தம். அவ்வளவே.

அப்படி பாலக்கொல்லை என்ற சிறு கிராமத்தில் தன் வீட்டின் ஒரு பகுதியிலேயே தபால் ஆபீசை அமைத்து நீண்ட நாட்களாக சேவை செய்து வந்தார் பெரியப்பா வேங்கடக்ரிஷ்ணன். அவர் துவக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஆனால் அவர் தபால் ஆபீஸ் காரராகவே அறியப்பட்டார். பிறகு அங்கிருந்து தபால்களை ஆறு மைல் தாண்டி இருக்கும் நகரத்திற்கு கொண்டுபோக EDD என்ற Extra Deartmental Duty நபர் ஒருவர் பகுதி நேர ஊழியராக நியமிக்கப் பட்டு தபால் போக்குவரத்து உண்டானது.

இன்று உள்ள அந்த கிராமத்தவர்கள் அவருடைய சேவைக்கு கடன் பட்டவர்கள்.

No comments: