Monday, September 3, 2007

உயிர்ப்பலி


மீசைக்காரர் என்று எல்லோராலும் அறியப்படும் என்னுடைய சின்ன தாத்தா சுப்பராமையர் முன்பு சொல்லியிருப்பது போல பேராளுமை உடையவர், அவருடைய நேர்மையும் மனிதநேயமும் கோபமும் பிரசித்தம், ஒருமுறை துர்க்கை கோவிலில் எல்லாரும் ஆடு மாடுகள் பலியிட வேண்டும் என்று சொன்னபோது அதை எதிர்த்தவர், ஊரின் பெரியவர்கள் அனைவருமே தயங்கிய நேரத்தில் அவர் உயிர்பலி வேண்டாம் என்று சொன்னதாகவும் அதனால் மாறுபட்ட கருத்துடன் அவரை எதிர்த்து பலி இடவேண்டும் இல்லாவிட்டால் அது வேறு யாரையாவது பலி வாங்கிவிடும் என்றும் சொல்ல உயிரைக் காக்கும் கடவுள் உயிரை வாங்குமா எனக்கேட்டு குளித்துவிட்டு ஈரத்துவாலையுடன் இடுப்பில் கட்டிய வேட்டியுடன் கோவிலை 108 சுற்று சுற்றி வந்து அமர்ந்து நீங்கள் கும்பிடப்போங்கள் பலி வாங்குவதாயிருந்தால் என்னை பலி வாங்கட்டும் என்று தீர்மானமாய் அமர்ந்ததாயும் பின்பு உயிர்ப்பலி இல்லாமல் வழிபாடு தொடர்ந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்,

1 comment:

Unknown said...

Wonderful collection. It proves he was not only courageous in his appearance, but in action too.