Sunday, September 23, 2007

கிருஷ்ணசாமி அய்யர்



திரு,கிருஷ்ணசாமி ஐயர். என் நினைவில் சற்றே நிழல்தனமாக நினைவிருக்கிறது, அவரை நினைக்கும்போது வெண்மை எனக்கு ஞாபகமாகிறது, ஏன் எனத்தொpயவில்லை, ஒருவேளை அவரது நிறமாக இருக்கலாம், அவர் கட்டும் பஞ்சகச்ச வேட்டியாக இருக்கலாம், இட்டுக்கொள்ளும் விபூதியாக இருக்கலாம், வெற்றிலை போடாத பல்லாக இருக்கலாம், ஏன் என்று அறியேன்,
குள்ளமான உருவம், நல்ல எலுமிச்சை நிறம், விபதியணிந்த நெற்றி, வழுக்கைத்தலை, தினமும் காலை பூசை செய்வார், செம்பராங்கல் ஒன்றில் சந்தனக் கட்டையை தேய்த்து விழுதாக வரும் சந்தனத்தால் பூசை செய்வார், வெள்ளெருக்கு வேர் ஒன்று கிழக்குப்பக்கமாக இருந்த வேர் ஒன்றில் செய்த விநாயகர் மரச்சிலை ஒன்றுக்கு பூசை செய்வார், அதற்கென்று சிறிய துணி ஒன்றும் உண்டு, கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டே டகுடகு டிகுடிகு டங்குடிங்குகு என சந்தனம் அரைப்பார் என்று என் அம்மா சொல்லுவார், மனிதர்கள் மேல் மிகுந்த அன்பு உடையவர், மிகுந்த ஆன்மீகத்தன்மை உடையவர், மென்மையான மனப்பாங்குடையவர், சிக்கனமானவர், பள்ளிக்கூட ஆசிhpயர், வாத்யார் என்று பெயர், வீட்டுக்கே வாத்யார் விடுதான், இப்போதுகூட பலர் வாத்யார் வீட்டு அம்மா என்று என் அம்மாவை குறிப்பிடுகிறhhர்கள,

No comments: