Monday, October 29, 2007

அக்கா

பெனுபர்த்தி ப்ளாக் நீ செய்து வருவது மிகவும் போற்றத்தக்கது. உனக்கு உள்ள ஓய்வு நேரத்தில் உபயோகமான வேலை செய்து வருவது வரவேற்கவேண்டிய அம்சம்.
கிருஷ்ணஸ்வாமி அய்யர்:- இவரைப் பற்றி புரிந்துகொள்ள நம் மூளை வியர்த்துவிடும்.லெளகிக வாழ்க்கையைப் பற்றி சொல்லப் போனால் கெளரவமாக குடும்பத்தை நடத்தினார்.அதில் ஏற்ற்த் தாழ்வுகள் சகஜம். ஆனால் ஆன்மீகமாக சுயமாகவே அவர் நல் வழி வகுத்துக்கொண்டவர்.கீதையில் சொன்னபடி அனைவரிடத்திலும் பாசமாகவும் அதே சமயம்அளவுக்கு மீறாமலும் இருந்த விதம் இப்போது புரிகிறது
அக்கா

No comments: