Monday, October 29, 2007

Sathya feedback

ரமேஷ்
நம் தாத்தாக்கள் இருவரும் குடும்பத்தை போஷிக்க வேண்டி காடாக இருந்த நிலத்தை வயலாகமாற்றிகூலி ஆட்கள் இன்றி தாங்களே சொந்தமாக செய்து, செலவுக்கு பாட்டிகளின் சகாயத்தோடு, பயிரிட்டனர். நீர் பாய்ச்ச அப்பாவும் ஆத்தூர் சித்தப்பவும் ஏற்றம் இறைத்தனர். தாயாதியின் வீட்டிலிருந்து சொந்த வீட்டைக் கட்டி வர குடும்பத்தினர் எல்லோரும் சிரமித்தனர். நம் வீட்டின் ஒவ்வொரு தூலத்திலும் பாட்டிகளின் நகைகள் காணப்படும். வீட்டு சுவருக்கு பூச்சு பூச அப்பா கொத்தனார் ஆனார். அத்தைகள் மண் சுமந்தனர். இப்படி நம் வீடு செங்கல், மண்ல், சுண்ணாம்பு மட்டுமன்றி அன்பு, பாசம், ப்ந்தம், அரவணைப்பு, ஒத்துழைப்பு இவற்றால் கட்டப்பட்ட "அன்பு மாளிகை" நம் வீடு. நாம் அதை விற்றாலும் நம் மனதில் பதிந்தது மற்றாருக்கு உரிமை ஆகாது.
Sathyam Akka

No comments: