Tuesday, October 30, 2007

பாலக்கொல்லை

பாலக்கொல்லை பெரியப்பா என்று எங்களால் அழைக்கப்படுபவர் வெங்கடகிருணஷ்ணய்யர், போஸ்ட்மாஸ்டர் பள்ளி ஆசிரியர் நிலச்சுவான்தார் என்ற பரிமாணங்கள் உண்டு, உள்கையில் பதிந்த வாட்ச் கையில் குடை தோல்செருப்பு நெற்றியில் விபூதி இதுதான் பாலக்கொல்லை பெரியப்பா, உளுந்தாண்டார்கோவிலில் நிலம் உண்டு ஆகையால் பெரும்பாலும் இங்கு வந்து போவார், தவறரமல் வீட்டுக்கு வந்து போவார், பேருந்து வசதிகள் வரும்வரை வண்டி கட்டிக்கொண்டுதான் வந்து போவார்கள், அறுவடை காலத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள், பிற்காலத்தில் பெரியம்மா கூட வந்துபோவார், நீண்ட நாட்கள் பாலக்கொல்லையில்தான் இருந்தார்கள், கடைசி காலத்தில் நெய்வேலிக்கு சென்று மகன்களுடன் தங்கியிருந்தார்கள்,
அவர்களுக்கு ஊமை சோதிடர் ஒருவர் மீது அதிக நம்பிக்கை உண்டு, அடிக்கடி ஊமை சோதிடன் சொன்னான் என்று சொல்வார்கள், அந்த சோதிடரும் அதிக வாஞ்சையுடன் அவர்கள் வீட்டிற்கு வந்துபோவதுண்டு,
குலதெய்வ வழிபாடான குருநாத சுவாமி பொங்கல் வைத்து வழிபடும் மிக நேமமமான பூசை நடந்தது இங்குதான் அதிகம் நான அறிந்தவரை,

No comments: