Monday, January 25, 2010

பிள்ளயார்

உளுந்தாண்டர்கோவில் வீட்டில் பூஜை மந்தாசனம் உண்டு. சின்ன கோயில் போன்ற அமைப்பு. அதில் ஒரு பிள்ளயார் உண்டு. அது வெள்ளை எருக்கு மரத்தின் கிழக்கு புறமாக (கிழக்க தெற்கா நினைவில்லை) செல்லும் வேரில் செய்த சிலை. அதற்கு நிதமும் அபிஷேகத்துடன் பூஜை உண்டு. அதற்கு தினமும் ஒரு மஞ்சள் தோய்த்த துணி ஒரு கட்டி பூஜிப்பார்/ ஒரு முறை எலி அந்த பிள்ளையாரை இழுத்துக்கொண்டு போய்விட்டது (எலி பிள்ளையாரை இழுக்கும் வாகனம் என்று தெரியும். ஆனால் இப்படியா? ). தாத்தா பிள்ளையாரை தேடோ தேடோ என்று தேடினால் அது சமையல் அறையில் கிடைத்ததாம். அப்போதோ அல்லது பிறகோ அதன் இடப்புறத்தில் ஒரு துளை விழுந்துவிட்டது. பிறகு அப்பா பிறகு நான் அதை பூஜை செய்துவந்தோம். துளை பெரிதாகவே  மூளியாக இருப்பதை பூஜிக்க வேண்டாம் என்று எடுத்து வைத்துவிட்டோம். 

No comments: