Monday, January 25, 2010

ஊமை ஜோசியன்

ஊமை ஜோசியன். இவரிடம் பாலகொல்லை பெரியப்பாவுக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு. அவ்வப்போது அவன் வந்து இவரிடம் ஏதாவது பேசுவது (!) உண்டு. அவன் ஜாதகமா கைரேகையா என்னவோ நினைவில் இல்லை. அவருக்கு ஆரூடம் சொல்லுவான். அடிக்கடி ஊமை ஜோசியன் சொன்னான் என்று சொல்வார். பெரும்பாலும் அவை நடந்திருக்கின்றன என்று சொல்வார்கள். சில சமயம் இதை செய் இதை செய்யாதே என்றும் சொல்வானாம். குடும்ப ரீதியில் அவனை ஒரு ஆரூட காம்பஸ் என்று சொல்லலாம். அவன் சொல்வது அவருக்குதான் புரியும். பெரியம்மாவுக்கு கூட புரியும்.

No comments: