Monday, January 25, 2010

சுப்பராமய்யர் டைரி

இதை முன்பே பதிவு செய்தேனோ என்னவோ தெரியவில்லை. செய்திருந்தால் இது கூறியது கூறல் வகைப் பிழையாக கொள்வீராக. 


மீசைக்கார தாத்தா எனப்படும் சுப்பராமய்யர் கம்பீரமும் நேர்மையும் கோபமும் கலந்த ஆகிருதி. 1965 JUNE. அவர் தனக்கு வயிறு ஏதோ அசொவ்கரியபடுத்துகிறது என்று தன மகனை - மாலி சித்தப்பா - வரச்சொன்னார். எனக்கு என்னமோ சரியில்லை. வில் வண்டிக்கு சொல்லிவிடு. நாளை என்னை சென்னைக்கு அழைத்துப்போ என்றார். ஏற்பாடுகள் ஆயின. திடீரென்று இரவு சென்னை வேண்டாம் உடனே கடலூருக்கு ஆஸ்பிடலுக்கு அழைத்துப்போ என்று சொன்னார். சரி என்று அழைத்துசென்றனர். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் படுத்திருப்பது என்பது காற்றாடாத ஆலமரம் போல. பெரிய தாத்தா தன் தம்பியின் ஆரோக்கியம் குறித்து  கவலை கொண்டார். ஆனால் பயப்படவில்லை. அந்த சமயத்தில் என் எம்மா என்னை வயிற்றில் சுமந்திருந்தார். பேறு காலம். நான் பிறந்தேன் என்ற செய்தி அவருக்கு கிடைத்து சந்தோஷப் பட்டாராம். நீண்ட எதிர் பார்ப்புக்குப் பின் பிறந்த ஆண் மகவு நான் என்பதால். அவரை பார்க்க வந்தவர்களை என்னை (குழந்தையாக இருந்த என்னை) பார்க்க சொல்லி அனுப்புவாராம். எனக்கு பெயரிடப்பட்ட நாலைந்து நாளில் அவர் ஒரு திடீர் நொடியில் ஆஸ்பத்திரியிலேயே இறந்துபோனார். அவர் தனக்கு என்னவோ உள் வலி ஒன்றை உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் தன் டைரியில் - நாகலக்ஷ்மிக்கு பிரசவ வேதனை எனக்கு மரண வேதனை என்று எழுதியிருந்தார் - அந்த டைரி இப்போது அவர் மகன் - மாலி சித்தப்பாவிடம் - இருக்கிறது. 

No comments: