Sunday, January 17, 2010

மார்கண்டேய தாத்தா


மார்கண்டேய தாத்தா - என் அப்பாவின் தாத்தா - குறைப்ரசவத்தில் பிறந்தவர். அவருடைய தாயார் ருக்மிணி அம்மா. ஏழாவதோ எட்டாவதோ மாதத்தில் அவருக்கு தீவிர வயிற்றுக்கடுப்பு டிசென்ட்றி ஏற்பட்டது. அப்போது அடிக்கடி ஏற்பட்ட உபாதையில் வயிற்றின் அழுத்தத்தில் திடீரென குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வாழை இலையில் விளக்கெண்ணை இட்டு மூடி - பஞ்சின் மூலம் நீரும் பாலும் ஊட்டி வளர்த்தனர்.

No comments: