
சின்ன தாத்தா பள்ளிக்கூட ஆசிரியர்/ அவர் தினமும் கையில் அலாரம் கடிகாரத்தை எடுத்துக்கொண்டு தெருவை ஒரு சுற்று சுற்றி வந்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு போவாராம். எப்போதும் அவருடன் அந்த டைம் பீஸ் இருக்குமாம்.
A humble attempt to record the incidents in the life of the Gems of Penuparthy
சின்ன தாத்தா ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியர். அவருடைய கோபமும் அடியும் பிரசித்தம். இப்போதுகூட ௬00 வயது தாண்டிய பலர் அவ்வூரில் அவருடைய ஆரம்ப பள்ளி மாணவனாக இருந்திருப்பார்கள். கார்போறல் பனிஷ்மென்ட் எல்லாம் சகஜம். அதே சமயம் அனுசரணையும் உண்டு. மாணவனை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோரை கண்டிப்பார். காலையில் கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு ஊர் தெருவை ஒருமுறை சுற்றி வருவாராம். அந்த நிமிடம் வரை பள்ளிக்கு போகாது இருக்க நினைத்த பையன்கள் எல்லோரும் பள்ளிக்கு ஒடுவார்களாம். சிறுவனுக்கு சட்டை இல்லை அதனால் அனுப்பவில்லை என்று சொன்னால் தன்னுடைய சட்டை ஒன்றை கொடுத்து போட்டுக்கொண்டு ஓடுடா என்பாராம். அவன் உடல் முழுவதையும் சாட்டையால் மறைத்தபடி ஓடுவானாம். காலை சாப்பாடு இல்லை என்றால் அவனை தன் வீட்டுக்கு அனுப்பி - இவனுக்கு சாப்பாடு போட்டு அனுப்பவும் - என்று ஒரு சிட் எழுதி அனுப்பி அவனை சாப்பிடச்சொல்லி பின் பள்ளிக்கு அழைப்பாராம்.
மீசைக்கார தாத்தா உறவினருடைய மகள் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் ஜானவாசம் (அல்லது கல்யாணத்தில் ஏதோ ஒரு முக்கிய அம்சமான விசேஷம்) புடவை வாங்க முடியவில்லை. அதனால் இருக்கிற நல்ல புடவையை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று இருப்பதாக சொன்னாராம். உடனே தாத்தா புது புடவை இல்லாமல் கல்யாண விசேஷமா என்று தான் எங்கேயோ பேசி தான் கடனாக புடவை வாங்கி அதை தந்து நடத்த சொன்னாராம். பிறகு தான் அண்ணனிடம் இப்படி கடன் வாங்கி தந்துவிட்டேன் என்று சொன்னாராம். பண வரத்து அவர்களிடம் இல்லாதபோதும் உதவி செய்தவர்கள் அவர்கள்.
இப்போதும் யாருடைய கல்யானதிர்காவது சென்று அன்பளிப்பு அளிக்கும்போது எனக்கு தாத்தாக்கள் நினைவுக்கு வருகிறார்கள். நான் அளிக்கும் அன்பளிப்பு எதுவாயினும் அது எனக்கு மிக சொற்பமானதாக எனக்கு தோன்றுகிறது.